Skip to main content

Posts

இந்திர பாசுரம் ( இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூர் எடுத்த காதை)

  இந்திர தெய்வத்தின் இந்திர விழா பாசுரம்  ( சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்) இந்திரவிழவு ஊர் எடுத்த காதை   "சூரியன் உதித்தல்"   அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து, அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து, ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல், கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை புதை இருள் - படாஅம் போக நீக்கி, உதைய மால் வரை உச்சித் தோன்றி, உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி - இரு பெரு வேந்தர் முனையிடம் போல இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய கடை கால் யாத்த மிடை மரச் சோலை, கொடுப்போர் ஓதையும், கொள்வோர் ஓதையும், நடுக்கு இன்றி நிலைஇய நாள்-அங்காடியில்- சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, ‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என, தேவர் கோமான் ஏவலின் போந்த காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை- புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும், பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து; துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி; ‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் பசியும், பிணியும், பகையும், நீங்கி; வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி; மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும், மூதில் பெண்டிர் ஓதையின் பெயர- வச்சிரக் ...
Recent posts