தமிழ் மொழியின் சங்க இலக்கியங்களில் இந்திரனைப் பற்றி பல்வேறு எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் , இந்திரன் மலை வெண்குடை மன்னவன் என்று வர்ணிக்கப்படுகிறார், அதாவது "முத்து மாலையும் வெள்ளைக் குடையும் கொண்ட இந்திரன்" என்று பொருளாகும்.
சிலப்பதிகாரம்,மணிமேகலையில் இந்திரன் வின்னவர்கோமான் எனக்குறிப்பிடப்படுகிறார்.வேந்தன்' என்பதற்கு 'அரசன்' எனும் பொருளிலே இலக்கியங்களில் பதிவுகள் காணப்படுகின்றன.
"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி" என்னும் குறளில் திருவள்ளுவர் நீத்தார் சிறப்பில் இந்திரனை குறிப்பிடுகிறார்.ஐந்து புலன்களையும் அடக்கியவனே தவம் செய்தவன் ஆவார். அவர் "ஐந்தவித்தான்" என்றும், "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்றும் வள்ளுவனால் சிறப்பிக்கப்படுபவர்.
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், போர்ப்புறு முரசம் கறங்க, ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே என புற நானூற்றுப்பாடல்
இந்திரனின் கோவிலை வச்சிரத்தடக்கை(வச்சிராயுதம்) நெடியோன் கோவின் என குறிப்பிடுகிறது.
Comments
Post a Comment